Print this page

தேர்தல் விவகாரம்- மஹிந்தவுக்கு ஜயசுந்தர கடிதம்

பொதுத் தேர்தல் மற்றும் பாராளுமன்றத்தை கூட்டுவது தொடர்பில், திகதியை குறிக்குமாறு ஜனாதிபதியின் செயலாளர் பி.பீ ஜயசுந்தர, தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் மஹிந்த தேசப்பிரியவுக்கு கடிதம் அனுப்பியுள்ளார்.

தேர்தல் தொடர்பில் உயர்நீதிமன்றத்தின் வியாக்கியானத்தை கோருமாறு, தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் மஹிந்த தேசப்பிரிய ஜனாதிபதி கோத்தாபய ராஜபக்ஷவுக்கு அறிவுறுத்தியிருந்தார். அவ்வாறு வியாக்கியானம் கேட்கவேண்டிய தேவையில்லை என்றும் அறிவுறுத்தியுள்ளார்.

 

Last modified on Thursday, 09 April 2020 12:55