கொழும்பில் கொரோனா தொற்றுக்கு உள்ளானவர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்துகொண்டே வருகிறது.
கொழும்ப-12 பண்டாரநாயக்க மாவத்தையில் தனிமைப்படுத்தப்பட்டிருந்த மேலும் 24 பேருக்கு கொரோனா தொற்றியுள்ளது.
இதனையடுத்து, கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை, 295ஆக அதிகரித்துள்ளது.
கொழும்பில் மட்டும் கொரோனா தொற்றுக்கு உள்ளானவர்களின் எண்ணிக்கை 77 ஆக அதிகரித்துள்ளது என சுகாதார அமைச்சு அறிவித்துள்ளது.