Print this page

அடுத்த 14 நாட்கள் பயங்கரமானவை

கொவிட் 19 வைரஸ் குறித்து அடுத்த இரண்டு வாரங்கள் மக்கள் மிகுந்த அவதானத்துடன் செயற்பட வேண்டுமென, மருத்துவ ஆராய்ச்சி நிறுவனத்தின் பணிப்பாளர்நாயகம் ஜயருவன் பண்டார தெரிவித்துள்ளார். 

சுகாதார வழிமுறைகளை சரியாக கடைப்பிடிக்காவிட்டால், நோய் தொற்று ஏற்படக்கூடுமென அவர் தெரிவித்துள்ளார்.

வைரஸ் தொற்றுக்கு இலக்கான ஒருவருக்கு, நோய் அறிகுறிகள் தென்படாத நேரங்களில், அது ஏனையவருக்கும் பரவும் வாய்ப்பு இருப்பதாக, அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.