Print this page

பாதாள உலக குழு உறுப்பினர்கள் கைது

February 05, 2019


குற்றச்செயல்களுடன் தொடர்புடைய பாதாள உலக குழு உறுப்பினர் மாகந்துரே மதூஷ் உள்ளிட்ட நான்கு பேர் டுபாயில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளனர்.

கொக்கேய்ன் ரக போதைப் பொருளைவைத்திருந்த குற்றச்சாட்டில் டுபாயில் உள்ள பிரதான விருந்தகம் ஒன்றில் வைத்து சுமார் 20 பேர் அந்த நாட்டு பொலிஸாரால் இன்று அதிகாலை கைது செய்யப்பட்டனர்.

அவர்களில் முக்கிய பாதாள உலக குழு உறுப்பினர்கள் இருப்பதாக கூறப்படுகிறது.

இதேவேளை, டுபாய் விருந்தகத்தில் வைத்து கைது செய்யப்பட்டவர்களில் இலங்கையின் பிரபல சிங்களப் பாடகர் அமல் பெரேராவும் உள்ளடங்குவதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.

Last modified on Wednesday, 11 September 2019 01:34