Print this page

கொரோனா “பூஜ்ஜியம்” சாத்தியமாகாது- அலைகள் தொடரும்

கொரோனா வைரஸ், கட்டுப்படுத்தும் மட்டத்தில் இருந்தாலும் அந்த வைரஸை “பூஜ்ஜியம்” ஆக்குவது கடினமாகும் என்று சுகாதார பணிப்பாளர் நாயகம் வைத்தியர் அனில் ஜாசிங்க தெரிவித்தார்.

ஆகையால், கொரோனா வைரஸை கட்டுப்படுத்துவதற்காக, சமூக இடைவெளியை தொடர்்சியாக கடைப்பிடிப்பதே சிறந்த முறைமையாகும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார். 

உலகுக்கே வியாபித்திருந்தும் ஏனைய தொற்று நோய்களை போல, இந்த கொரோனா வைரஸ் எதிர்காலத்தில் உருவாகாமல் இருக்கவேண்டுமாயின் சமூக இடைவெளியை பேணுவது கட்டாயமாகும் என்றார். 

 

மனிதர்களுக்கு தொற்றும் ஒரேயொரு தொற்றுநோய், கொரோனா வைரஸ் இல்லை என்றும் அவற்றையெல்லாம் கட்டுப்படுத்தி கொண்டுதான் முன்னோக்கி நகர்ந்துகொண்டிருக்கின்றோம். இந்நிலையில், ஏனைய தொற்று நோய்கள் தொடர்பில் கவனம் செலுத்தவில்லையெனில், அதுவும் ஆபத்தானது என்றார். 

கொரோனா வைரஸின் இரண்டாவது அலை, மூன்றாவது அலை ஏற்படக்கூடும். அந்த அலைகள் முதலாவது அலையை போன்று ஆபத்தானதாக இருக்காது என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

Last modified on Sunday, 03 May 2020 02:35