Print this page

இராதா இராஜினாமா?

February 07, 2019


பெருந்தோட்டத் தொழிலாளர்களின் நாளொன்றுக்கான அடிப்படை சம்பளத்தை 1000 ரூபாவாக அதிகரிக்காவிட்டால், தன்னுடைய அமைச்சுப் பதவியிலிருந்து தான் இராஜினாமா செய்யப்போவதாக அமைச்சர் வீ.இராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.

நுவரெலியாவில் இடம்பெற்ற கூட்டமொன்றில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.

தோட்டத் தொழிலாளர்களின் சம்பளத்தை 750 ரூபாவாக அதிகரித்தமையை இட்டு தான் திருப்தியடையவில்லை என்றும், அதனை தான் ஒருபோதும் ஏற்றுக்கொள்ளமாட்டேன் என்றும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

பெருந்தோட்டத் தொழிலாளர்களுக்கான அடிப்படை சம்பளத்தை 1000 ரூபாவாக அதிகரிப்பதற்கு அரசாங்கம் நடவடிக்கை எடுக்கவேண்டும் என இராதாகிருஷ்ணன் கோரிக்கை விடுத்தார்.

Last modified on Thursday, 07 February 2019 15:14