Print this page

தேர்தலை நடத்தமுடியாது- நீதிமன்றில் மஹிந்த தரப்பு

ஜூன் மாதம் 20 ஆம் திகதி நாடாளுமன்றத் தேர்தலை நடத்த கூடிய சூழல் இல்லை என உயர்நீதிமன்றத்தின் கவனத்துக்கு கொண்டுவரப்பட்டது. 

தேர்தல்கள் ஆணைக்குழுவின் சார்பில் ஆஜரான சட்டத்தரணி , உயர் நீதிமன்றின் கவனத்துக்கு கொண்டுவந்தனர். 

ஜூன் மாதம் 20 ஆம் திகதி தேர்தலை நடத்துவதற்கு தீர்மானிக்கப்பட்டு வெளியிடப்பட்டிருந்த வர்த்தமானிக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்ட அடிப்படை உரிமை மனுக்கள் மீதான விசாரணை உயர்நீதிமன்றில் கடந்த மூன்று நாள்களாக இடம்பெற்று வருகின்றது.

இந்த நிலையில், நாட்டின் தற்போதயை நிலையில், குறித்த திகதியில் தேர்தலை நடாத்த முடியாதென தேர்தல்கள் ஆணைக்குழு சார்பில் முன்னிலையான ஜனாதிபதி சட்டத்தரணி சாலிய பீரிஸ் நீதிமன்றுக்கு அறிவித்துள்ளார்.

Last modified on Wednesday, 20 May 2020 09:04