Print this page

பசில் பங்கேற்கவில்லை?

February 09, 2019

ஸ்ரீலங்கா பொதுஜன முன்னணியின், ஜனாதிபதி வேட்பாளர் தொடர்பாக நேற்றுமுன்தினம் நடத்தப்பட்ட கலந்துரையாடல் ஒன்றில் முன்னாள் அமைச்சர் பசில் ராஜபக்ஷ கலந்து கொள்ளவில்லை என தகவல் வெளியாகியுள்ளது.

பேராசிரியர் ஜி.எஎல்.பீரிசின் இல்லத்தில் நடைபெற்ற இந்தக் கலந்துரையாடலில் ஜனாதிபதி வேட்பாளர் தொடர்பாகவே கலந்துரையாடப்பட்டுள்ளது.

இந்தக் கூட்டத்தில் எதிர்க்கட்சித் தலைவர் மஹிந்த ராஜபக்ஷ பங்கேற்ற நிலையில், பசில் ராஜபக்ஷ இந்தக் கூட்டத்தை தவிர்த்துள்ளார் என கூறப்படுகின்றது.

Last modified on Saturday, 09 February 2019 04:39