Print this page

விமர்சனம் தொடர்பில் மனித உரிமைகள் ஆணைக்குழு எதிர்ப்பு

February 09, 2019

இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழு மீது ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன முன்வைத்த குற்றச்சாட்டுகளை ஆணைக்குழு நிராகரிததுள்ளது.

இதனால் தாம் ஆழ்ந்த கவலையும் மனச்சோர்வும் அடைந்திருப்பதாக ஆணைக்குழுவின் தலைவர் கலாநிதி தீபிகா உடகம தெரிவித்துள்ளார்.

இதுதொடர்பாக அவர் ஜனாதிபதிக்கு கடிதம் ஒன்றை அனுப்பி வைத்துள்ளார்.

கடந்த புதன்கிழமை நாடாளுமன்றத்தில் உரையாற்றிய ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, மாலியில் ஐ.நா அமைதிப்படையில் பணியாற்றிய இரண்டு படையினர் கொல்லப்பட்டமைக்கு மனித உரிமை ஆணைக்குழுவின் தாமதமான செயற்பாடே காரணம் என குற்றம்சாட்டியிருந்தார்.

இதுகுறித்து, ஜனாதிபதிக்கு கலாநிதி தீபிகா உடகம அனுப்பியுள்ள கடிதம் ஒன்றில், விமர்சனங்களால் மனச்சோர்வு அடைந்திருப்பதாக அதில் தெரிவித்துள்ளார்.