Print this page

துப்பாக்கிச் சூட்டில் திருமண ஜோடிக்கு காயம்

February 09, 2019


தொம்பே, வனலுவாவ வடக்கு பிரதேசத்தில் இடம்பெற்ற துப்பாக்கிப் பிரயோகத்தில், திருமணமான ஜோடியொன்று காயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளது.

கருத்துமோதல்களை அடுத்தே, இந்த துப்பாக்கிப் பிரயோகம் மேற்கொள்ளப்பட்டுள்ளது என ஆரம்பக்கட்ட விசாரணைகளிலிருந்து தெரியவந்துள்ளது என பொலிஸார் தெரிவித்தனர்.

சம்பவத்தில் காயமடைந்த இருவருக்கும் 23 வயது என்றுத் தெரிவித்த பொலிஸார், சந்தேகநபரை அடையாளம் கண்டுள்ளதாகவும், அவரை கைது செய்வதற்கான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன என்றும் தெரிவித்தனர்.