Print this page

கோத்தாவின் அறிவிப்பால்- மொட்டு அணிக்குள் குழப்பம்

எதிர்வரும் பொதுத்தேர்தலில் எந்தவொரு கட்சிக்காகவோ அல்லது அரசியல் நடவடிக்கைகளிலோ ஈடுபடக்கூடாதென, அரச நிறுவனங்களின் தலைவர்களுக்கு ஜனாதிபதி கோத்தாபய ராஜபக்ஷ அறிவுறுத்தல் வழங்கியுள்ளார்.

 ஏதேனும் ஒரு கட்சிக்காக அரசியலில் ஈடுபடவேண்டிய தேவையிருந்தால் சட்ட ரீதியாக தனது பதவியிலிருந்து விலகி அதனை செய்ய முடியும் என்றும் ஜனாதிபதி  தெரிவித்துள்ளார்.

இந்த உத்தரவுகளை மீறும் அரச நிறுவனங்களின் தலைவர்கள், பணிப்பாளர் சபை உறுப்பினர்கள், அதிகாரிகளுக்கு எதிராக சட்டம் கடுமையாக நடைமுறைப்படுத்தப்படும் எனவும் தெரிவித்துள்ளார்.

ஜனாதிபதி கோத்தாபய ராஜபக்ஷவின் அறிவிப்பினால் ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவுக்குள் சற்று குழப்பகரமான நிலைமை ஏற்பட்டுள்ளது என அறியமுடிகின்றது. 

ஜனாதிபதியின் இந்த திடீர் அறிவிப்பு குறித்து, அரசியல் ரீதியில் பல்வேறான கருத்துகள் முன்வைக்கப்பட்டு வருகின்றன.

Last modified on Monday, 08 June 2020 15:51