Print this page

நேற்று சிக்கிய 22 பேரின் தகவல் வெளியானது

நாட்டில் கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளான 22 பேர் நேற்று (08) பதிவாகியுள்ளனர்.

இதற்கமைய, தொற்றாளர்களின் எண்ணிக்கை 1857 ஆக அதிகரித்துள்ளது.

வைரஸ் தொற்றுக்குள்ளான 22 பேரில் 8 பேர் குவைட்டிலிருந்து நாடு திரும்பியவர்கள் எனவும் 4 பேர் இந்தியாவில் இருந்து நாடு திரும்பியவர்கள் எனவும் தெரிவிக்கப்படுகிறது.

ஏனைய 10 பேர் கடற்படையைச் சேர்ந்தவர்களென, தொற்று நோயியல் பிரிவு தெரிவித்துள்ளது.