Print this page

பொலிஸ் அதிகாரியின் மீது எம்.பி தாக்குதல்

February 11, 2019


ஐக்கிய தேசியக் கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் சமிந்த விஜயசிறி, பொலிஸ் அதிகாரியின் மீது தாக்குதல் நடத்தியுள்ளார். பாதிக்கப்பட்ட அதிகாரி, பண்டாரவளை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

போதைப்பொருள் ஒழிப்பு பிரிவின் அதிகாரியின் மீதே தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.

பாராளுமன்ற உறுப்பினரை கைது செய்து, அவரிடம் வாக்குமூலம் பெற்றுக்கொள்வதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக, பொலிஸார் தெரிவித்தனர்.