Print this page

ரணில், மைத்திரியிடம் வாக்குமூலம் பெறவும்

முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மற்றும் முன்னாள் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க ஆகியோரிடம்  வாக்குமூலம் பதிவு செய்யுமாறு சட்டமா அதிபர் அறிவுறுத்தியுள்ளார்.

மத்திய வங்கி பிணைமுறி மோசடி தொடர்பில்  இந்த வாக்குமூலம் பதிவுசெய்யப்படவுள்ளது.

இதேவேளை, முன்னாள் பிரதமரின் ஆலோசகர் பாஸ்கரலிங்கம் மற்றும் மக்கள் வங்கியின் முன்னாள் பொது முகாமையாளர் ஆகியோரிடமும் வாக்குமூலம் பதிவு செய்யுமாறு பிரதி பொலிஸ்மா அதிபருக்கு சட்டமா அதிபர் அறிவுறுத்தியுள்ளார்.