Print this page

கொரோனா ​எண்ணிக்கை 2511ஆக அதிகரிப்பு

நாட்டில் கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளான மேலும் 43 பேர் அடையாளம் காணப்பட்டுள்ளதாக தேசிய தொற்று நோயியல் பிரிவு தெரிவித்துள்ளது.

இதனையடுத்து, இலங்கையில் கொரோனா வைரஸ் தொற்றாளர்களின் எண்ணிக்கை 2511ஆக அதிகரித்துள்ளது.

கந்தகாடு புனர்வாழ்வு நிலையத்தில் இருந்து 13 பேரும் அவர்களுடன் தொடர்பை பேணியதாக தெரிவிக்கப்படும் 30 பேருமே இவ்வாறு அடையாளம் காணப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

இதுவரை 1980 பேர் குணமடைந்துள்ளதுடன், 520பேர் வைத்தியசாலைகளில் சிகிச்சைப்பெற்று வருகின்றனர்.