Print this page

கைதிகளின் உறவினர்களுக்கு கொரோனா இல்லை

கந்தகாடு புனர்வாழ்வு மத்திய நிலையத்திற்கு கைதிகளை பார்வையிட வந்த அவர்களின் குடும்ப உறுப்பினர்கள் 114 பேர் மற்றும் அவர்களுடன் நெருங்கிப் பழகியவர்கள் 368 பேரிடம் மேற்கொள்ளப்பட்ட பி.சி.ஆர் பரிசோதனையின் அடிப்படையில் அவர்களுக்கு கொவிட் வைரஸ் தொற்று ஏற்படவில்லை என உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

இராணுவத் தளபதி லெப்டினன் ஜெனரல் சவேந்திர சில்வா இதனை தெரிவித்தார்.