Print this page

முல்லைத்தீவுக்கு பிரதமர் விஜயம்

February 16, 2019

பிரதமர் ரணில் விக்ரமசிங்க இன்றைய தினம் முல்லைத்தீவு மாவட்டத்திற்கு செல்லவுள்ளார்.

முல்லைத்தீவு மாவட்ட செயலகத்தில் இடம்பெறவுள்ள வீடமைப்பு, மீள்குடியேற்றம் மற்றும் அபிவிருத்திகள் தொடர்பான மீளாய்வு கூட்டத்தில் பங்கேற்கவுள்ளார்.

வட மாகாணத்துக்கு விஜயம் மேற்கொண்டுள்ள பிரதமர் தலைமையில் இந்த மீளாய்வு கூட்டம் இன்று முற்பகல் 10.30க்கு இடம்பெறவுள்ளது.

இதேவேளை, நேற்று பிற்பகல் மன்னார் மாவட்டத்திற்கு விஜயம் செய்த பிரதமர் அந்த மாவட்டத்தின் அபிவிருத்தி திட்டங்கள் தொடர்பான மீளாய்வு கூட்டத்தில் கலந்து கொண்டமை குறிப்பிடத்தக்கது.

 

Last modified on Wednesday, 11 September 2019 01:38