Print this page

'புதிய அரசியலமைப்பானது மோசடியானது'

February 16, 2019

உத்தேச புதிய அரசியலமைப்பானது முற்றிலும் மோசடியானது என முன்னாள் ஜனாதிபதியும் எதிர்க்கட்சி தலைவருமான மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.

எதிர்க்கட்சி தலைவரின் உத்தியோகபூர்வ வாசஸ்தலத்தில் நேற்று இடம்பெற்ற கலந்துரையாடலின் போதே அவர் இதனை கூறியுள்ளார்.

அந்த அரசியலமைப்பின் ஊடாக நாட்டின், சிங்கள, தமிழ் முஸ்லிம் உள்ளிட்ட சகல இன மக்களும் ஏமாற்றப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.

ஐக்கிய தேசிய கட்சி அரசாங்கத்தின் புதிய அரசியலமைப்பு முன்வைக்குமாறு கோரிக்கை விடுத்த போதும், அதனை அரசாங்கம் மேற்கொள்ளவில்லை என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

Last modified on Wednesday, 11 September 2019 01:38