Print this page

புதன்கிழமை கார்பன் பரிசோதனை அறிக்கை

February 17, 2019

மன்னார் புதைகுழியில் இருந்து மீட்கப்பட்ட மனித எலும்புக்கூடுகளின் கார்பன் பரிசோதனை அறிக்கை எதிர்வரும் புதன்கிழமை மன்னார் நீதிவான் நீதிமன்றில் சமர்ப்பிக்கப்படவுள்ளது.

மன்னார் புதைகுழி அகழ்வுக்குப் பொறுப்பான சட்ட மருத்துவ அதிகாரி சமிந்த ராஜபக்ஷ இந்த தகவலை வெளியிட்டுள்ளார்.

மன்னார் புதைகுழியில் மீட்கப்பட்டுள்ள 300இற்கும் அதிகமான எலும்புக்கூடுகளில் இருந்து தெரிவு செய்யப்பட்ட ஆறு எலும்புக்கூடுகளின் மாதிரி எலும்புகள் புளோரிடா ஆய்வகத்துக்கு கார்பன் பரிசோதனைக்காக அனுப்பப்பட்டன.

அவற்றில் ஐந்து மாதிரிகள் தொடர்பான அறிக்கை நேற்று முன்தினம் கிடைத்ததாகவும் அந்த அறிக்கை புதன்கிழமை நீதிமன்றத்தில் சமர்ப்பிக்கப்படும் என்றும் அவர் கூறியுள்ளார்.