Print this page

“சம்பாயோ” சிக்கினார்

பிடியாணை பிறப்பிக்கப்பட்டிருந்த முன்னாள் நீர்க்கொழும்பு சிறைச்சாலை அத்தியட்சகர் அனுருத்த சம்பாயோ குருணாகலையில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளார்.

பணிநீக்கம் செய்யப்பட்டுள்ள முன்னாள் நீர்க்கொழும்பு சிறைச்சாலை அத்தியட்சகர் அனுருத்த சம்பாயோவை கைது செய்து நீதிமன்றில் முற்படுத்துமாறு நீர்க்கொழும்பு பதில் நீதவானால் கடந்த 22 ஆம் திகதி பிடியாணை வௌியிடப்பட்டிருந்த நிலையில், இன்று அவர் நீர்க்கொழும்பு பொலிஸ் குழுவொன்று முன்னிலையில் சரணடைந்த பின்னர் அவர் இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார்.

நீர்க்கொழும்பு சிறைக் கைதிகளுக்கு சொகுசு வசதிகளை ஏற்படுத்திக் கொடுத்த சம்பவம் தொடர்பில் அவருக்கு எதிராக குற்றம் சுத்தப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.