Print this page

20ஆம் திகதி புதிய பாராளுமன்றம் கூடும்

பாராளுமன்றத்தின் புதியக் கூட்டத்தொடர், ஆகஸ்ட் மாதம் 20ஆம் திகதியன்று கூடவுள்ளது. அதற்கான வர்த்தமானி அறிவித்தல் வெளியானது.

புதிய பாராளுமன்றத்துக்கு உறுப்பினர்களை தெரிவு செய்வதற்கான வாக்களிப்பு, நாடளாவிய ரீதியில், நாளை (05) காலை 7 மணிமுதல் மாலை 5 மணிவரையிலும் நடைபெறும்.

அதற்கான ஏற்பாடுகள் யாவும் பூர்த்தியாகிவிட்டன. வாக்குப்பெட்டிகளை வாக்களிப்பு நிலையங்களுக்கு கொண்டு செல்லும் நடவடிக்கைகள் இன்று (04) காலை 8 மணிமுதல் ஆரம்பமாகியது என தேர்தல்கள் ஆணைக்குழு அறிவித்துள்ளது. 

Last modified on Monday, 10 August 2020 03:10