Print this page

மாகாண சபைத் தேர்தலை கோரி மனு

February 19, 2019


மாகாண சபைத் தேர்தலை உடனடியாக நடத்துவதற்கான நடவடிக்கைகள் எடுக்குமாறு, தேர்தல்கள் ஆணைக்குழுவுக்கு ரிட் கட்டளையை பிறப்பிக்குமாறு கோரி, உயர்நீதிமன்றத்தில் நேற்று (18) ரிட் மனுவொன்று தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

உண்மையை ஆராயும் அமைப்பே இவ்வாறு ரிட் மனுவொன்றை தாக்கல் செய்துள்ளது. அந்த மனுவில், பிரதிவாதிகளாக, தேர்தல்கள் ஆணைக்குழுவின் தவிசாளர் உள்ளிட்ட ஆணைக்குழுவின் உறுப்பினர்கள் குறிப்பிடப்பட்டுள்ளனர்.