Print this page

ஜனநாயகத்தை பாதுகாத்ததால் இலங்கைக்கு அங்கீகாரம்

February 19, 2019

ஜனநாயகத்தைப் பாதுகாப்பதில் இலங்கை முன்னோடியாகத் திகழ்வதாக சபாநாயகர் கரு ஜயசூரிய தெரிவித்துள்ளார்.

காலி - நுகதுவ பிரதேசத்தில் இடம்பெற்ற நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றும் பொழுதே சபாநாயகர் இவ்வாறு கூறியுள்ளார்.

ஜனநாயகத்தை பாதுகாத்த நாடு என்ற வகையில் இலங்கை சர்வதேச அங்கீகாரத்தைப் பெற்றுள்ளது இது நாட்டிற்குக் கிடைத்த மாபெரும் வெற்றியாகும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.