Print this page

மாகாண சபை தேர்தல் குறித்து ஆலோசனை

February 20, 2019

இன்று கூடும் கட்சித் தலைவர்கள் கூட்டத்தில் மாகாண சபை தேர்தல் குறித்து கலந்துரையாடப்படவுள்ளதாக அமைச்சர் மனோ கணேசன் தெரிவித்துள்ளார்.

கட்சித் தலைவர்களுக்கான கூட்டம் சபாநாயகரின் தலைமையில் இன்று நாடாளுமன்ற கட்டடத் தொகுதியில் இடம்பெறவுள்ளது.

இதன்போது தேர்தல் நடத்தப்படும் முறைமை உள்ளிட்டவை குறித்து கலந்துரையாடப்படவுள்ளது.

அத்துடன், தேர்தல் தாமதமாவதற்கான காரணம், தேர்தலை நடத்துவதில் உள்ள பிரச்சினைகள் என்பன குறித்தும் இதன்போது பேசப்படும் எனவும் அமைச்சர் மனோ கணேசன் தெரிவித்துள்ளார்.

Last modified on Wednesday, 11 September 2019 01:37