Print this page

'இவ்வாரம் விவாதம் இல்லை'

February 20, 2019


தேசிய அரசாங்கம் குறித்த பிரேரணை மீதான விவாதம் பாராளுமன்றத்தில் இந்த வாரம் இடம்பெறாது என சபை முதல்வர் அமைச்சர் லக்ஸ்மன் கிரியெல்ல தெரிவித்துள்ளார்.

பெரும்பாலும் அடுத்தவாரம் இடம்பெறவுள்ள பாராளுமன்ற அமர்வின் போதே குறித்த பிரேரணையை விவாதத்திற்கு எடுத்துக்கொள்ள தீர்மானித்துள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

குறித்த பிரேரணை மீதான விவாதம் குறித்த தினத்தை தமக்கு பிரதமர் இதுவரை அறிவிக்கவில்லை எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்தும் இன்றைய கட்சித் தலைவர்கள் கூட்டத்தில் கலந்துரையாடப்படும் எனவும் லக்ஸ்மன் கிரியெல்ல குறிப்பிட்டுள்ளார்.

 

Last modified on Wednesday, 20 February 2019 16:38