Print this page

பாடசாலை நேரங்களில் மாற்றம்

கொரோனா அச்சுறுத்தல் காரணமாக விடுமுறை வழங்கப்பட்டிருந்த பாடசாலைகள் தற்பொழுது மீண்டும் ஆரம்பிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், அரச மற்றும் தனியார் பாடசாலைகளில் மாணவர்களின் கல்வி நடவடிக்கைகளுக்காக வழங்கப்பட்ட கால அட்டவனையில் மாற்றம் செய்யப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

இதற்கமைய, தரம் 10,11,12,13 ஆகிய வகுப்பு மாணவர்களின் கல்வி நடவடிக்கைகள் தினமும் காலை 07.30 மணிமுதல் பிற்பகல் 3.30 மணி வரை தொடரும் என கல்வி அமைச்சு குறிப்பிடப்பட்டிருந்து.

ஆனால், எதிர்வரும் செப்டம்பர் மாதம் இரண்டாம் திகதி முதல் இந்த நிலையை மாற்றியமைக்க தீர்மானிக்கப்பட்டுள்ளதாக அந்த அமைச்சு மேலும் தெரிவித்துள்ளது.

அதன்படி,தரம் 10,11,12,13 ஆகிய வகுப்பு மாணவர்களின் கல்வி நடவடிக்கைகள் காலை 07.30 மணி முதல் பிற்பகல் 01.30 மணிவரை மாத்திரமே இடம்பெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Last modified on Saturday, 22 August 2020 04:51