Print this page

மைத்திரியின் மகளுக்கு உயர்பதவி

முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் மகளுக்கு, உயர்பதவி ஒன்று வழங்கப்படவுள்ளதாக அறியமுடிகின்றது.

ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சிக்குள்ளே அப்பெண்ணுக்கு உயர்பதவி வழங்கப்படவுள்ளது.

அதன்பின்னர், எதிர்வரும் மாகாண சபைத் தேர்தலில் அப்பெண், வடமேல் மாகாண சபையின் சார்பில் களமிறக்கப்படவுள்ளார் என அந்தத் தகவல்கள் தெரிவித்தன.