Print this page

சகலருக்கும் பரிசோதனை வேண்டாம்

February 20, 2019


கொக்கைன் பயன்படுத்தும் அமைச்சர்கள், நாடாளுமன்ற உறுப்பினர்கள் உள்ளிட்டோர் தொடர்பில் பாராளுமன்றத்தில் இன்று (20) வாக்குவாதங்கள் முன்வைக்கப்பட்ட நிலையில், ஒன்றிணைந்த எதிரணியைச் சேர்ந்த எம்.பி ஒருவர், பாராளுமன்றத்தை பிரதிநிதித்துவப்படுத்தும் 225 பேரிடமும் மரபணு பரிசோதனை (டீ.என்.ஏ) நடத்தவேண்டுமென கோரியிருந்தார்.

எனினும், இந்த வாதப் பிரதிவாதங்களின் போது எழுந்த எதிர்க்கட்சித் தலைவர் மஹிந்த ராஜபக்ஷ, 225 பேரிடமும் பரிசோதனை நடத்தவேண்டியதில்லை. கொக்கைன் பயன்படுத்துவதாக கூறப்படும் 24 எம்.பிகளிடம் மட்டுமே பரிசோதனை நடத்தினால் போதும் என்றார்.