Print this page

தேடப்பட்டு வந்த இருவர் கைது

February 21, 2019

பல்வேறு குற்றச்செயல்களுடன் தொடர்புடையவர்கள் என்ற சந்தேகத்தில் பொலிஸாரால் தேடப்பட்ட இருவர் நீர்கொழும்பில் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.

நீர்கொழும்பு, சீதுவ மற்றும் ஜா- எல பகுதிகளில் உள்ள வீடுகளின் சொத்துக்களை திருடிய பல்வேறு சம்பவங்கள் தொடர்பிலேயே இவர்கள் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.

திருடப்பட்ட வீட்டு உபகரணங்கள் பலவும் சந்தேக நபர்களிடம் இருந்து பொலிஸாரால் கைப்பற்றப்பட்டுள்ளன.

32 மற்றும் 41 வயதுடையவர்களை கைதுசெய்யப்பட்டதுடன், நீர்கொழும்பு நீதிமன்றில் இன்று (21) முன்னிலைப்படுத்தவுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.