Print this page

சூதாட்டத்தில் ஈடுபட்ட 08 பேர் கைது

February 21, 2019

புத்தளம் வெலிஅஹாரே பிரதேசத்தில் சூதாட்டத்தில் ஈடுபட்ட 08 பேர் பொலிஸாரால் இன்று காலை கைது செய்யப்பட்டுள்ளனர்.

சந்தேக நபர்களில் நவகத்தேகம பிரதேச சபையின் பிரதிநிதிகள் இருவர் உள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

பொலிஸாருக்கு கிடைக்கப்பெற்ற தகவலுக்கமைய வீடொன்றில் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பின்போது, சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டதுடன் பின்னர் பிணையில் விடுதலை செய்யப்பட்டுள்ளனர்.