Print this page

சரத்துக்கு இந்தியா திடீர் அழைப்பு

September 09, 2020

ஸ்ரீலங்கா பொதுஜன முன்னணியின் முக்கியஸ்தரும், இராஜாங்க அமைச்சருமான அட்மிரல் சரத் வீரசேகரவுக்கு இந்திய அரசாங்கம் அவசர அழைப்பு ஒன்றை விடுத்துள்ளது.

இவர் எதிர்வரும் சில தினங்களில் கொழும்பில் உள்ள இந்திய உயர்ஸ்தானிகராலயத்திற்கு விஜயம் செய்யவுள்ளார்.

இந்தியாவினால் அறிமுகம் செய்யப்பட்ட 13ஆவது திருதச்சட்டம் மற்றும் மாகாண சபை முறையை இரத்து செய்வது குறித்து அரசாங்கம் ஆராய்கிறது என்று அவர் அண்மையில் கூறியிருக்கிறார்.

இதுபற்றி பேச்சு நடத்தவே மேற்படி இந்திய அரசு அழைப்பு விடுத்துள்ளது என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.

Last modified on Wednesday, 09 September 2020 08:51