Print this page

குடு சூட்டி மீது துப்பாக்கிப் சூடு நடத்தியவர் கைது

February 23, 2019

மாளிகாவத்த, மெல்வத்த பிரதேசத்தில் குடு சூட்டி என்ற பெண்ணின் மீது துப்பாக்கிப் பிரயோகத்தை மேற்கொண்டவர் என்ற சந்தேகத்தின் பேரில், நபரொருவர், விசேட அதிரடிப்படையினரால் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.

இவ்வாறு கைதுசெய்யப்பட்டவர், கொலன்னாவைச் சேர்ந்த 21 வயதான நபர் என்றும், அவர் கொலன்னாவை, லக்ஷத வீட்டுத் தொகுதியை வசிப்பிடமாகக் கொண்ட மொஹமட் நௌபர் மொஹமட் அலி என அடையாளம் காணப்பட்டுள்ளார்.

சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்ட நபர், டுபாயில் கைதுசெய்யப்பட்ட கஞ்சிபானி இம்ரான் என்பவரின், சகாக்களில் ஒருவர் என்றும் விசேட அதிரடிப்படையின் அதிகாரிகள் தெரிவித்தனர்.

சந்தேகநபர், திட்டமிட்ட குற்றப்பிரிவிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளார் என பொலிஸ் ஊடகப் பேச்சாளர் திணைக்களம் அறிவித்துள்ளது.

சந்தேகநபரை, கொழும்பு, இல-4 நீதிமன்றத்தில் இன்று (23) ஆஜர்படுத்தப்பட்டார். அப்போது அவரை 7 நாட்கள் தடுத்துவைத்து விசாரணைக்கு உட்படுத்துவதற்கான அனுமதியை பெற்றுக்கொண்டதாகவும் பொலிஸார் ஊடகப் பேச்சாளர் திணைக்களம் தெரிவித்துள்ளது.