Print this page

யாழில் கடையடைப்பு: பதற்றம்- பொலிஸார் குவிப்பு

September 28, 2020

முன்னாள் எல்.ரீ.ரீ.ஈ செயற்பாட்டாளர் டி.திலீபனின் 33ஆவது இறப்பு தினத்தை நினைவுகூரும் நிகழ்வுகளை பொலிஸார் தடுத்ததால், வாரத்தில் யாழ்ப்பாணத்தில் ஒரு பதற்றமான சூழ்நிலை ஏற்பட்டது.

பொலிஸாரின் செயற்பாட்டுக்கு எதிர்ப்பு தெரிவித்து அரசியல் கட்சிகளின் பிரதிநிதிகள் மற்றும் அப்பகுதியில் வசிப்பவர்கள் யாழ்ப்பாணத்தின் சாவகாச்சேரியில் உள்ள சிவன் கோவில் முன் உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டிருந்தனர்.

போரின்போது இறந்த எவரையும் நினைவுகூர தமிழ் மக்களுக்கு உரிமை உண்டு என்றும் தற்போதைய அரசாங்கம் வடக்கில் தமிழ் மக்களுக்கு அவர்களின் உரிமைகளை பறித்துவிட்டதாகவும் போராட்டக்காரர்கள் தெரிவித்தனர்.

யாழ்ப்பாண பல்கலைக்கழக வளாகத்திற்கு கறுப்பு நிற உடை அணிந்து, மாணவர்கள் குழுவொன்று வந்தது. இதனால் அங்கு பதற்றமான சூழ்நிலை ஏற்பட்டது.

பின்னர் பொலிஸாரின் தடை உத்தரவுக்கு இணங்குமாறு பல்கலைக்கழகத்தை கேட்டுக்கொண்டனர். இருப்பினும், மாணவர்கள் எந்த நிறத்திலும் ஆடை அணிந்து யாழ்ப்பாண பல்கலைக்கழக மைதானத்திற்குள் நினைவுச்சின்னத்திற்கு அருகில் நினைவுச் சேவையை நடத்தலாம் என்று மாணவர்கள் வாதிட்டனர்.

முன்னாள் புலிகளின் செயற்பாட்டாளர் திலீபன் செப்டம்பர் 26, 1987 அன்று உண்ணாவிரதத்தின் போது இறந்தார்.

Last modified on Friday, 23 October 2020 09:51