Print this page

மீண்டும் ஆஜராகுமாறு மைத்திரிக்கு பணிப்பு

உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பில் விசாரணை செய்யும் ஜனாதிபதி ஆணைக்குழுவில், முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன இன்று (05) வாக்கு மூலம் வழங்க ஆஜராகியிருந்தார்.

முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, சுமார் 7 மணி நேர வாக்குமூலம் வழங்கியதன் பின்னர் அங்கிருந்து வௌியேறியுள்ளார்.

அத்துடன், அவரை மீண்டும் 12 ஆம் திகதி ஆணைக்குழுவில் ஆஜராகுமாறு அறிவிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

நாளைய தினம் முன்னாள் பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவை ஆஜராகுமாறு அறிவிக்கப்பட்டுள்ளது.