Print this page

16.5 பில்லியன் டொலர் வழங்கவுள்ள சீனா

இலங்கைக்கு 16.5 பில்லியன் டொலர்களை வழங்கவுள்ளதாக இலங்கைக்கான சீன தூதரகம் அறிவித்துள்ளது.

அறிக்கையொன்றில் சீன தூதரகம் மேலும்தெரிவித்துள்ளதாவது

ஒக்டோபர் 9 ம் திகதி இலங்கைக்கு 16.5 பில்லியன் டொலர்களை வழங்குவது குறித்து சீனாவிற்கும் இலங்கைக்கும் இடையில் உடன்படிக்கை கைச்சாத்திடப்பட்டுள்ளது.

இருநாடுகளுக்கும் இடையில் கைச்சாத்திடப்பட்டுள்ள பொருளாதார தொழில்நுட்ப உடன்படிக்கையிலேயே இலங்கைக்கு நிதிவழங்கும் விடயம் இடம்பெற்றுள்ளது.

இலங்கைக்கு சீன உயர்மட்ட குழுவினர் விஜயம் செய்தவேளை இந்த உடன்படிக்கையில் சீனாவின் சர்வதேச ஒத்துழைப்பு அபிவிருத்தி முகவர் அமைப்பின் தலைவரும் இலங்கையின் நிதியமைச்சின் திறைசேரிசெயலாளரும் இந்த உடன்படிக்கையில் கைச்சாத்திட்டுள்ளனர்.

இந்த அவசரமான மிகதேவைப்படுகின்ற உதவிக்காக இலங்கை ஜனாதிபதியும் பிரதமரும் இலங்கை அரசாங்கத்தினதும்மக்களினதும் நன்றிகளை தெரிவித்துள்ளனர்.