Print this page

கர்தினாலை தவறாக பேசிய பெண் கைது

பேராயர் வணக்கத்திற்குரிய கர்தினால் மெல்கம் ரஞ்சித் ஆண்டகையை குறிப்பிட்டு இனங்களுக்கு இடையில் குரோதத்ததை ஏற்படுத்தும் விதமாக சமூக ஊடகங்களில் கருத்து தெரிவித்த பெண் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

குற்றப்புலனாய்வு திணைக்கள அதிகாரிகளினால் பத்தரமுல்ல பகுதியில் வைத்து குறித்த நபர் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

குறித்த பெண் சமூக ஊடகங்களில் காணொளி ஒன்றை வௌியிட்டு இவ்வாறு இனங்களுக்கு இடையில் குரோதத்தை ஏற்படுத்தும் விதமான கருத்துக்களை தெரிவித்ததாக பொலிஸ் ஊடக பேச்சாளர் பிரதி பொலிஸ்மா அதிபர் அஜித் ரோஹண தெரிவித்துள்ளார்.

சம்பவம் தொடர்பில் குற்றப்புலனாய்வு திணைக்கள அதிகாரிகள் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
 
 
 
Last modified on Monday, 19 October 2020 03:41