Print this page

விமானம் திடீரென தரையிறக்கம்

February 27, 2019


டுபாய் நோக்கி பயணித்த விமானம் இலங்கை திடீரென தரையிறக்கம்

டுபாய் நோக்கி பயணித்த ஸ்ரீலங்கா விமான நிறுவனத்துக்கு சொந்தமான யூ-எல் 225 விமானம் மீண்டும் கட்டுநாயக்க பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் தரையிறக்கப்பட்டுள்ளது.

330 - 200 ரக எயார் பஸ் ரகத்தை சேர்ந்த இந்த விமானம் நேற்று மாலை 06.35 மணியளிவில் டுபாய் நோக்கிய பயணத்தை ஆரம்பித்தது.

எனினும், அந்த விமானம் மீண்டும்  கட்டுநாயக்க பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் தரையிறக்கப்பட்டதாக கூறப்படுகின்றது.

இந்திய வான் பரப்பில் வைத்து பறவையொன்று மோதியதன் காரணமாக குறித்த விமானம் தரையிறக்கப்பட்டதாக விமான நிலையத்தின் பேச்சாளர்களில் ஒருவர் கூறியுள்ளார்.

இதனையடுத்து, பயணிகள்  யூ-எல் 225 இலக்கமுடைய மற்றுமொரு விமானத்தில் பயணத்தை  தொடர ஏற்பாடுகள் செய்யப்பட்டதாகவும் அவர் கூறினார்.