Print this page

மதூஷ் நீதிமன்றில் இன்று முன்னிலை

February 28, 2019

 பாதாள உலகக் குழுத் தலைவராக அறியப்படும் மாகந்துரே மதூஷ் பாடகர் அமல் பெரேரா மற்றும் அவரின் மகனான நதீமால் பெரேரா உள்ளிட்டோர் இன்றைய தினம் டுபாய் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்படவுள்ளனர்.

டுபாயில் கைதுசெய்யப்பட்டுள்ள இவர்கள்  அனைவரும் இன்றைய தினம் வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.

இன்று அவர்கள் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்பட்ட பின்னர், அவர்களின் விளக்கமறியல் காலம் மேலும் ஒரு மாத காலத்துக்கு நீடிக்கப்படலாம் என அவர்கள் சார்பில் முன்னிலையான சட்டத்தரணி ஷாப்திக வெல்லப்புலி தெரிவித்துள்ளார்.

டுபாய் பொலிஸாரின் விசாரணைகள் நிறைவடையாத காரணத்தினால், அவர்களின் விளக்கமறியல் காலம் நீடிக்கப்படக்கூடும் என்றும் சட்டத்தரணி குறிப்பிட்டுள்ளார்.