Print this page

பஸ் விபத்தில் நால்வர் காயம்

யாழ்ப்பாணத்திலிருந்து கொழும்பு நோக்கி சென்ற பஸ் ஒன்று கிளிநொச்சி பரந்தன் பகுதியில் விபத்துக்குள்ளாகியுள்ளது.

இந்த சம்பவம் நேற்று இரவு 11.20 மணியளவில் இடம்பெற்ற இந்த விபத்தில் பஸ் சாரதி உள்ளட்ட 4 பேர் விபத்தில் படுகாயமடைந்துள்ளனர்.

படுகாயமடைந்தவர்கள் கிளிநொச்சி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதுடன் விபத்துதொடர்பான விசாரணைகளை கிளிநொச்சி பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.