Print this page

அரசியல் கைதிகளை விடுவிக்குமாறு வலியுறுத்தி போராட்டம்

December 28, 2020

சிறைச்சாலைகளில் தடுத்துவைக்கப்பட்டுள்ள அரசியல் கைதிகளை உடன் விடுதலை செய்யுமாறு வலியுறுத்தில் யாழில் இன்று மாபெரும் போராட்டமொன்று முன்னெடுக்கப்பட்டது.

அரசியல் கைதிகள் விடுதலைக்கான குரலற்றவர்களின் குரல் அமைப்பு ஏற்பாடு செய்த இந்த போராட்டம் நல்லூர் பின் பகுதியில் இன்று காலை நடைபெற்றது.

கொல்லாதே கொல்லாதே அரசியல் கைதிகளை கொல்லாதே, விடுதலை செய் விடுதலை செய் அரசியல் கைதிகளை விடுதலை செய், கொல்லாதே கொல்லாதே கொல்லாதே அரசியல் கைதிகளும் மனிதர்களே, சிங்களவர்களுக்கு ஒரு நீதி தமிழர்களுக்கு ஒரு நீதியா? உட்பட பல்வேறு கோஷங்களை இதன்போது எழுப்பட்டன.

போராட்டத்தில் அரசியல் கைதிகளின் உறவினர்கள், மதத் தலைவர்கள், அரசியல் கட்சிகளின் தலைவர்கள், நாடாளுமன்ற உறுப்பினர்கள், உள்ளூராட்சி மன்றங்களில் தவிசாளர்கள், உறுப்பினர்கள், பொதுமக்கள் என பலர் கலந்துகொண்டனர்.

Last modified on Monday, 28 December 2020 07:44