Print this page

இருவரைக் கொன்றது கொரோனா

கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்ட நிலையில் சிகிச்சை பெற்று வந்த மேலும் இருவர் உயிரிழந்துள்ளனர்.

இவ்வாறு உயிரிழந்தவர்கள் இருவரும் இரத்தினபுரி பகுதியை சேர்ந்தவர்கள் என அரசாங்க தகவல் திணைக்களம் அறிவித்துள்ளது.

71 மற்றும் 86 வயதுடைய இருவரே இவ்வாறு உயிரிழந்துள்ளனர்.

இதனையடுத்து, இலங்கையில் கொரோனாவினால் மரணித்தவர்களின் மொத்த எண்ணிக்கை 215 ஆக அதிகரித்துள்ளது.