Print this page

‘மாகாண சபைத் தேர்தலை நடத்தினால் படுதோல்வி’

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச தலைமையிலான அரசு, மாகாண சபைகளுக்கான தேர்தலை தற்போது நடத்தினால் அரசுக்கு மிகப் பெரிய தோல்வி ஏற்படும் என புலனாய்வுப் பிரிவுகளால் அரச உயர்பீடத்துக்கு வழங்கப்பட்ட இரண்டு அறிக்கைகளில் தெரிவிக்கப்பட்டுள்ளது என ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் லக்ஸ்மன் கிரியெல்ல தெரிவித்துள்ளார்.

இந்த அச்சத்தின் காரணமாகவே கோட்டாபய அரசு மாகாண சபைத் தேர்தலை நடத்தாமல் ஒத்திவைத்து வருகின்றது எனவும் அவர் சுட்டிக்காட்டினார்.

அரச புலனாய்வுத்துறை இரண்டு பகுதிகளாகப் புலனாய்வு செய்திருக்கின்ற நிலையில், அதில் கோட்டாபய அரசின் படுதோல்வி நிச்சயமாக உறுதிசெய்யப்பட்டது எனவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.