Print this page

நல்லிணக்க அலுவலகம் மீண்டும் திறப்பு

தேசிய ஐக்கியம் மற்றும் நல்லினத்திற்கான அலுவலகம் மீண்டும் விரைவில் திறக்கப்படவுள்ளது.

நல்லாட்சி அரசாங்கத்தினால் இந்த அலுவலகம் பல்வேறு விமர்சனங்களுக்கு மத்தியில் அமைச்சரவை அங்கீகாரத்துடன் 2015ம் ஆண்டு ஏப்ரல் 8ம் திகதி திறக்கப்பட்டது.

முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா பண்டாரநாயக்க குமாரதுங்க இதன் தலைவராக பணியாற்றினார்.

எனினும் புதிய அரசாங்கம் வந்தவுடன் அந்த அலுவலகம் மூடப்பட்டதுடன், அதன் பணிப்பாளரும் நீங்கினார்.

இந்நிலையில் மீண்டும் அந்த அலுவலகத்தை தீர்ப்பதற்கான யோசனையை நிதியமைச்சர் அலிசப்ரி அமைச்சரவைக்கு அண்மையில் சமர்பித்துள்ளார்.

தலைவர் ஒருவருடன் பணிப்பாளர் உட்பட 11 பேருடன் இந்த அலுவலகம் மீண்டும் பணிகளை தொடங்கவுள்ளதாக அரசாங்க தகவல்கள் தெரிவிக்கின்றன.