Print this page

உடனடியாக அழைக்க 3 இலக்கங்கள்

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் ஆலோசனையின் பிரகாரம், பொலிஸ் திணைக்களத்துக்கு மேலும் மூன்று தொலைபேசி இலக்கங்கள் அறிமுகம் செய்துவைக்கப்பட்டுள்ளன.

சட்டவிரோதமான முறையில் முன்னெடுக்கப்படும் மதுபான விற்பனை தொடர்பில் தகவல்களை வழங்குவதற்காகவே இந்த தொலைபேசி இலக்கங்கள் அறிமுகம் செய்துவைக்கப்பட்டுள்ளன.

அதனடிப்படையில், 011 30 24 820 / 011 30 24 848 / 011 30 24 850 ஆகிய இலக்கங்களுடன் தொடர்புகொண்டு அறிவிக்கலாம்.