Print this page

ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்பை மீள கட்டியெழுப்ப முடிவு !

September 01, 2021

ஶ்ரீலங்கா சுதந்திர கட்சியின் தலைமையில் அரசியல் கூட்டமைப்பு ஒன்றை ஏற்படுத்த கட்சியின் மத்திய குழு அனுமதி அளித்துள்ளதாக அதன் சிரேஸ்ட உப தவிசாளர் பேராசிரியர் ரோஹண லக்க்ஷமன் பியதாஸ தெரிவித்துள்ளார். அதன்படி, ஶ்ரீலங்கா சுதந்திர கட்சியின் தலைமையில் இயங்கிய ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்பை மீள கட்டியெழுப்ப முடிவு செய்யப்பட்டிருப்பதாகவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார். 

கண்டியில் இடம்பெற்ற நிகழ்வொன்றின் கலந்து கொண்ட பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போது இந்த விடயத்தினை அவர் தெரிவித்துள்ளார். தொடர்ந்தும் அவர் கருத்துத் தெரிவிக்கையில், 

கட்சியின் எதிர்கால பயணம், மாற்று அரசாங்கம், கட்சியின் முன்னேற்றம் மற்றும் இணைந்து செயற்படுவது குறித்து நாம் முடிவுகளை எடுத்துள்ளோம். ஶ்ரீலங்கா சுதந்திர கட்சி தலைமையில் அரசாங்கத்தை கைப்பற்றிய கூட்டமைப்பு உள்ளது. நாம் மீண்டும் பொதுஜன ஐக்கிய முன்னணி மற்றும் ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்பை கட்டியெழுப்ப தீர்மானித்துள்ளோம். அதன்படி நாட்டிலுள்ள இடதுசாரி, தேசப்பற்று கட்சிகள் மற்றும் நாடாளுமன்றுக்கு வெளியில் உள்ள கட்சிகளை இணைத்து கொண்டு கூட்டமைப்பை வலுப்படுத்த மத்திய குழு கூட்டத்தில் முடிவு செய்துள்ளோம் என்றும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

Last modified on Wednesday, 01 September 2021 06:26