Print this page

இலங்கை அரசுடன் பேசுவதானது தற்கொலைக்கு சமம்! பொங்கும் சிவாஜிலிங்கம்

September 24, 2021

ஒரு போதும் நாம் உள்நாட்டு பொறிமுறையை ஏற்கத் தயாரில்லை என்று  தமிழ் தேசிய கட்சியின் பொதுச் செயலாளர் எம். கே.சிவாஜிலிங்கம் தெரிவித்துள்ளார்.

இன்று காலை 10:30 மணிக்கு அவரது அலுவலகத்தில் இடம் பெற்ற ஊடக சந்திப்பின் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

அவர் மேலும் தெரிவித்ததாவது,

இலங்கை அரசுடன் பேசுவதாக இருந்தால் சர்வதேச மத்தியஸ்தத்துடன் தான் பேச வேண்டும் என்றும் ஒரு போதும் இலங்கை அரசை நம்பத் தயாரில்லை என்றும் தெரிவித்துள்ளார்.

மேலும்  அரசுடன் பேச செல்வதென்பது தற்கொலைக்கு சமம் என்றும் நடந்த இனப் படுகொலைக்கு சர்வதேச விசாரணை வேண்டும் என்றும் தெரிவித்தார்.