Print this page

“பிரித்தானியாவுக்கு உரிமை இல்லை”

இலங்கையின் மனித உரிமைகள் தொடர்பில் பேசுவதற்கு பிரித்தானியாவுக்கு எந்தவித உரிமையும் இல்லை என, ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் விமல் வீரவன்ச தெரிவித்துள்ளார்.

பிலியந்தலை பகுதியில் நேற்று இடம்பெற்ற மக்கள் சந்திப்பின்போது, அவர் இதனைக் கூறியுள்ளார்.

அத்துடன், “இலங்கையின் தீர்மானிக்கும் சக்தியை இல்லாதுசெய்வதற்காகவே அரசியலமைப்பு திருத்தம் கொண்டுவர முயற்சிக்கப்படுகின்றது. இவை அனைத்தும் ஒரே திட்டத்தில் காணப்படும் பகுதிகள். முழு படத்தையும் பார்த்தால்தான் புரியும்” என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.