Print this page

வடமாகாண புதிய ஆளுநராக ஜீவன் தியாகராஜா நியமனம்

வடமாகாண புதிய ஆளுநராக ஜீவன் தியாகராஜா நியமிக்கப்படவுள்ளார்.

மனிதாபிமான அமைப்புக்களின் கூட்டமைப்பின் நிறைவேற்றுப் பணிப்பாளராகவும் , தேசிய தேர்தல் ஆணைக்குழுவின் உறுப்பினரராகவும் ஜீவன் தியாகராஜா பணியாற்றி வருகின்றார்.

இந்நிலையிலேயே, வட மாகாணத்துக்கான புதிய ஆளுநராக ஜீவன் தியாகராஜா நியமிக்கப்படவுள்ளார்.

இதையடுத்து அவர் தற்போது வகிக்கும் பதவியை இராஜினாமா செய்து வட மாகாண ஆளுநராகப் பதவி ஏற்பார் என தெரிவிக்கப்படுகின்றது.

Last modified on Friday, 08 October 2021 03:51