Print this page

மஹிந்தானந்தவுக்கு எதிராக உருவாகும் நம்பிக்கையில்லா பேரணை

சரியான நேரத்தில் உரத்தை வழங்காமல் விவசாயிகளின் நம்பிக்கையை மீறியதாக விவசாய அமைச்சர் மஹிந்தானந்த அளுத்கமகேவுக்கு எதிராக நம்பிக்கையில்லாப் பிரேரணையை கொண்டு வர நடவடிக்கை எடுக்கப்படும் என்று ஐக்கிய மக்கள் சக்தியின் செயலாளர் திஸ்ஸ அத்தநாயக்க தெரிவித்தார்.

கண்டியில் நேற்று (17) இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே மேற்கண்ட விடயத்தை அவர் தெரிவித்தார்.

பாராளுமன்ற குழுவுடன் கலந்துரையாடல்கள் நடத்தப்படும் என்றும் அதற்கு தேவையான ஏற்பாடுகள் செய்யப்படும் என்றும் அவர் குறிப்பிட்டார்.

 இந்த அரசாங்கத்தின் கீழ், விவசாயிகள் அர்த்தமற்றவர்களாக மாறிவிட்டனர், விவசாயிகளுக்கு அரசாங்கம் நிவாரணம் வழங்க முடியாது என்றும் தெரிவித்தார்

Last modified on Monday, 18 October 2021 04:39