Print this page

ஈரான் படகில் இருந்து 100 கிலோகிராம் ஹெரோய்ன் மீட்பு


ஹெரோயின் போதைப்பொருளுடன் பயணித்த ஈரான் நாட்டு படகு ஒன்றுடன், 09 பேர் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.

தெற்கு கடற்கரைப்பகுதியில் வைத்து போதைப்பொருள் ஒழிப்பு பிரிவினர் மற்றும் இலங்கை கடற்படையினரால் குறித்த படகு சுற்றிவளைக்கப்பட்டுள்ளது.

இதன்போது, படகில் இருந்து 100 கிலோகிராம் ஹெரோயின் கைப்பற்றப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இந்த நிலையில், குறித்த படகு தற்போது கொழும்பு துறைமுகத்திற்கு கொண்டுவருவதற்கு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

Last modified on Wednesday, 11 September 2019 01:44